பாபகர்த்தாரி யோகம்

🪯 உங்கள் வீட்டிற்கு இரு புறமும் தாதாக்கள் குடியிருந்தால் என்ன ஆகும்? ⁉️

✴️ ஏதாவது அடிதடி என்றால் உங்களுக்கும் சேர்த்து அடிவிழும்.

அல்லது❗

✴️ அருகில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணக்காக – என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்காக – உங்களையும் கூட்டிக் கொண்டுபோய் வதைக்கலாம்.

✴️ இன்னொன்றையும் யோசியுங்கள். ❗

✴️ அந்தக் காலத்தில் பொதுமகளிர் எல்லாம் வீடுகளில் குடியிருந்து கொண்டே தொழில் செய்தார்களாம்.

✴️ அதுபோல உங்கள் வீட்டிற்கு இரு புறமும் அந்த மாதிரிப் பெண்கள் இருந்தால் உங்கள் நிலை என்ன ஆகும்.

✴️ சரக்கடித்துவிட்டு, அவர்களைத் தேடி வருகிறவன்,

குடி மயக்கத்தில் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டித் திறக்கச் சொல்லி தகராறு செய்யும் அபாயம் இருக்கும்

✴️ அதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள நமக்கு முக்கியம்.

✴️ நமது நன்மைக்கும், அமைதிக்கும் முக்கியம்.

✴️ அதுபோல ஜாதகத்தில் ஒருவீட்டின் இருப்க்கமும் தீய கிரகங்கள் இருந்தால்,

✴️ அந்த வீட்டிற்கு அது கேடானது.

💢 அதற்குப் பாபகர்த்தாரி யோகம் என்று பெயர்.

💢 பாபிகளால் சூழப்பெற்ற வீடு – அதற்குரிய கேடுகளை அனுபவிக்க வேண்டும் என்று பொருள்

💢 இன்று அதைப் பற்றி ஒரு பர்ர்வை பார்ப்போம்! ❗

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

🔹 பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள் :-

♈ இது ஒரு அவயோகம்.

அதை முதலில் நினைவில் வையுங்கள்.

♈ ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால்

அதாவது

இருந்தால்,

அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

🪭 1.

ஒன்றாம் வீடு :-

அதாவது

லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால்,

அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான்.

விபத்துக்கள் நேரிடும்.

எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.

🪭 2.

இரண்டாம் வீடு:

இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

(2nd house is the house of finance and family affairs)

குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும்.

குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்

🪭 3.

மூன்றாம் வீடு:

மரியாதைக்கு பங்கம் ஏற்படும்.

உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள்,

மற்றும்

நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.

🪭 4.

நான்காம் வீடு:

பெற்றோர்களை இழக்க நேரிடும்.

வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும்.

அமைதியை இழக்க நேரிடும்.

தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.

🪭 5.

ஐந்தாம் வீடு:

குழந்தைகளுக்கு,

குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு

சிரமங்கள்,

கஷ்டங்கள்,

துன்பங்கள் ஏற்படும்.

எப்போதும் மன நிம்மதி இருக்காது.

🪭 6.

ஆறாம் வீடு:

தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும்.

விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.

🪭 7.

ஏழாம் வீடு:

மனைவி

அல்லது

கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான்.

அவர்களால் சிரமப்பட நேரிடும்.

அவர்களால் விரையங்கள் ஏற்படும்.

🪭 8.

எட்டாம் வீடு:

வறுமை நிலவும்.

கடன்கள் உண்டாகும்.

நோய்கள் உண்டாகும்.

சிரமமான வழ்க்கை வாழ நேரிடும்.

பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

🪭 9.

ஒன்பதாம் வீடு:

தந்தையை இழக்க நேரிடும்.

வறுமையான சூழல்கள் உண்டாகும்.

வறுமை வாட்டி எடுக்கும்.

🪭 10.

பத்தாம் வீடு:

வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)

🪭 11.

பதினொன்றாம் வீடு:

காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும்.

கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும்.

வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.

🪭 12.

பன்னிரெண்டாம் வீடு:

தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும்.

ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும்.

பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

🟡 எல்லாமே பொதுப்பலன்கள்.

அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம்

அல்லது

குறையலாம் அல்லது

இல்லாமல் போகலாம்.

அதையும் மனதில் கொள்ளவும்

← Back to blog